இந்த்3ரியஸ்யேன்த்3ரியஸ்யார்தே2 ராக3த்3வேஷௌ வ்யவஸ்தி2தௌ1 |

1யோர்ன வஶமாக3ச்1சே2த்2தௌ1 ஹ்யஸ்ய ப1ரிபன்தி2னௌ ||34||

இந்த்ரியஸ்ய—--புலன்களின்; இந்த்ரியஸ்ய அர்த்தே—--புலப் பொருட்களில்; ராக—--பற்றுதலும்; த்வேஷௌ—-வெறுப்பும்; வ்யவஸ்திதௌ—--அமைந்துள்ள தயோஹோ—--அவைகளின்; ந-—ஒருபோதும் இல்லை; வஶம்—---கட்டுப்படுத்தலில்; ஆகச்சேத்----ஆக வேண்டும் (ந ஆகச்சேத்—-ஒருபோதும் நடக்கக்கூடாது) தௌ—-அவைகள்; ஹி—-நிச்சயமாக; அஸ்ய—--ஒருவருக்கு; பரிபந்தினௌ--—எதிரிகள்

అనువాదం

BG 3.34: ஐம்புலன்கள் இயற்கையாகவே உணர்வு பொருள்களின் மீது பற்றுதலையும் வெறுப்பையும் அனுபவிக்கின்றன, ஆனால் அவைகளால் கட்டுப்படுத்தப்படுவதில்லை, ஏனென்றால் அவை தாக்குவதற்காக பதுங்கியிருக்கும் எதிரிகளை போன்றவை.

వ్యాఖ్యానం

மனமும் புலன்களும் அவற்றின் இயல்பான போக்குகளால் உந்தப்படுகின்றன என்பதை ஸ்ரீ கிருஷ்ணர் முன்பு வலியுறுத்தியிருந்தாலும், இப்போது அவற்றைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைத் திறக்கிறார். நம்மிடம் ஜட உடல் இருக்கும் வரை, அதன் பராமரிப்புக்காக, புலன்களின் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும். தேவையானதை உட்கொள்வதை நிறுத்துமாறு ஸ்ரீ கிருஷ்ணர் நம்மைக் கேட்கவில்லை, ஆனால் பற்றுதலையும் வெறுப்பையும் ஒழிக்கப் பழகிக்கொள்ள கூறுகிறார். நிச்சயமாக ஸ்ம்ஸ்காரங்கள் (கடந்தகால வாழ்க்கைப் போக்குகள்) அனைத்து உயிரினங்களிலும் ஆழமான வேரூன்றிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, ஆனால் பகவத் கீதையில் கற்பிக்கும் முறையை நாம் கடைப்பிடித்தால், நிலைமையை சரிசெய்வதில் நாம் வெற்றிபெறலாம்.

புலன்கள் இயற்கையாகவே புலப்பொருட்களை நோக்கி ஓடுகின்றன மற்றும் அவற்றின் பரஸ்பர தொடர்பு இன்பம் மற்றும் துன்ப உணர்வுகளை உருவாக்குகிறது. உதாரணமாக, சுவை அரும்புகள் சுவையான உணவுகளுடன் தொடர்பில் மகிழ்ச்சியையும், கசப்பான உணவுகளுடன் தொடர்பு கொள்ளும்போது துன்பத்தையும் அனுபவிக்கின்றன. மனம் இந்த பொருட்களுடன் தொடர்புபடுத்தும் இன்பம் மற்றும் துன்பத்தின் உணர்வுகளை மீண்டும் மீண்டும் சிந்திக்கிறது. உணர்வுப் பொருட்களில் உள்ள இன்ப எண்ணங்கள் பற்றுதலை உருவாக்கும் அதே வேளையில் வலி பற்றிய எண்ணங்கள் வெறுப்பை உருவாக்குகின்றன. ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் பற்றுதல் அல்லது வெறுப்பு உணர்வுகளுக்கு அடிபணிய வேண்டாம் என்று கூறுகிறார்.

நமது உலகக் கடமையை நிறைவேற்றுவதில், நாம் விரும்பக்கூடிய மற்றும் விரும்பத்தகாத எல்லா வகையான சூழ்நிலைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். விரும்பக்கூடிய சூழ்நிலைகளுக்காக ஏங்குவதையோ, விரும்பத்தகாத சூழ்நிலைகளைத் தவிர்க்கவோ நாம் பயிற்சி செய்ய வேண்டும். மனம் மற்றும் புலன்களின் விருப்பு வெறுப்புகள் இரண்டிற்கும் அடிமையாக இருப்பதை நிறுத்தும்போது, ​​நமது தாழ்ந்தநிலையை வெல்வோம். நாம் நமது கடமையை நிறைவேற்றுவதில் இன்பம் மற்றும் துன்பம் இரண்டையும் அலட்சியப்படுத்தும் போது, ​​நாம் நமது உயர்ந்த இயல்பிலிருந்து செயல்படுவதற்கு உண்மையிலேயே சுதந்திரமாகி விடுவோம்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
3. கர்ம யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency